தனி
நடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பல்திறன் மிக்க கலைஞரே கே.எஸ்.
பாலச்சந்திரன் என தென்றல் சேவையின் பணிப்பாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தில் இந்திய கலாசார நிலையத்தின்
ஏற்பாட்டில் இடம்பெற்ற கே.எஸ். பாலச்சந்திரன்
நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்ணை றைட் கே.எஸ்.பாலச்சந்திரன் என
எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.எஸ்.பாலச்சந்திரன் 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் கரவெட்டி என்ற
கிராமத்தில் பிறந்தார்.
இலங்கையில் பல்துறைக் கலைஞர்கள் என்று ஒரு
சிலர்தான் இருக்கின்றார்கள். நகைச்சுவை, தனிநடிப்பு,