‘‘சூடானின் பார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களின் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்களாயின் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற மோதல்களின் போது எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான சர்வதேச பிடியாணைகள் ஒன்றல்ல இரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரை கைது செய்யவேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) உத்தரவு விடுத்த பின்னர் இணையத்தளமொன்றில் எழுந்த கேள்வியே இது.
இந்த கருத்தினை பதிவு செய்திருந்த வலைத்தள பயனர் சூடான் ஜனாதிபதிக்கு ஆதரவானவரன்றோ அல்லது ஐ.சி.சி.க்கு
